இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து "குழந்தைகள் சுதந்திரம்"எனும் தலைப்பில் ஓவியப் பயிற்சிப் பட்டறை 01/02/2024 அன்று உதவிப் பிரதேச செயலர், நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இதில் வளவாளராக சித்திரப் பாட ஆசிரியர் து.குமரநாதன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் அழகிய சிறுவர் கழக மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், வெளிக்களப்பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
















