சிறுவர் சபை அங்கத்தவர்களுக்கான முதலுதவிப்பயிற்சியானது பிரதேச செயலக மண்டபத்தில் 31.10.2023 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியினை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து வருகை தந்த வளவாளர் பிரகாஷ் அவர்கள் வழங்கினார். அதில் 82 சிறுவர் சபை அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடாத்தப்படும் உற்பத்தித்திறன் போட்டியில் எமது அலுவலகம் தேசிய ரீதியில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.கடந்த காலத்தில் நாம் அர்ப்பணிப்பாகவும் வினைத்திறனாகவும் சேவை வழங்கியதற்காக தேசிய ரீதியில் உற்பத்தித்திறன் விருதுகள் - 2020 போட்டித்தொடரில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளோம். இது கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெறுபேறாகும்.இச் சந்தர்ப்பத்தில் நாம் அலுவலகத்தில் செய்த சிறிய சிறிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்கிய பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.














