Fairmed நிறுவனத்தினரால் இன்று (14.12.2023) மாற்றுத்திறனாளிகளை பராமரிப்போருக்கான பயிற்சிநெறி உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

முதியோர் தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் இயக்கச்சி மற்றும் இத்தாவில் பகுதியை சேர்ந்த முதியோர்கள் மன்னார் மாவட்டத்திற்கு ஆன்மீக பயணத்தை 08.12.2023 (வெள்ளிக்கிழமை) மேற்கொண்டனர்.

கமத்தொழில் அமைச்சின் கிராமிய பொருளாதார பிரிவினால் நடைமுறைப்படுகின்ற வதிவிடங்களை அண்டிய ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 3 ஆடுகள் நேற்று (05.12.2023) பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டது.

"நேர்மையான தேசத்தை நோக்கி" எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலக பிரிவில் இலஞ்ச, ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளின் வரிசையில் இன்று (08.12.2023) வெளிக்களப்பிரிவு, சமுர்த்தி பிரிவு, திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கும் குழுச்செயற்பாட்டு நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.

சௌபாக்கியா திட்டத்தின் கீழ் நகர்த்தும் ​கோழிக்கூடு வழங்குவதற்காக பயனாளிகளுடனான கலந்துரையாடல் முகமாலை கிராம அலுவலர் பிரிவு மண்டபத்தில் 05.12.2023 இன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் பயனாளிகளின் சம்மதத்தை பெற்றுக்கொள்ளல், கோழிக்கூடு தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது.

Scroll To Top